Monday, October 25, 2010

குரான் எரிப்பு நடந்தேறிவிட்டது

என்ன பிரதர்ஸ் எங்கே நடந்தது என்று கேட்கத்தோன்றுகிறதா?கவலைப்படாதீர்கள்.எரித்தவர்கள் கிறிஸ்தவ பாதிரியார் அல்ல இஸ்லாமியர்களின் உயிரினும் மேலான முகமது அவர்களின் மருமகனும் இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் இரண்டாவது கலிபாவுமான உஸ்மான் அவர்களே முதலாவது குரான் எரிப்பு நாளை நடத்தியவர்.அதை பற்றிய செய்திகளை இந்த கீழ்காணும் வீடியோமூலம் விரிவாக அறிந்து கொள்ளலாம்.

Wednesday, September 15, 2010

கத்தோலிக்க வேதாகமம் 73 புத்தகங்கள் இருப்பது ஏன்? எம்.எம் அக்பருக்கான கேள்வி?



கேனான் என்ற பதம் உபயோகப்படுத்தப்படும் பொழுது, கேனான் என்றால் எபிரேய மொழியில் சத்தியத்தின் அளவுகோல் என்று அர்த்தமாகும். மற்றொருவிதத்தில் ஏன் வேதத்தின் 66 புத்தகங்களை மட்டும் தெரிந்தெடுத்திருக்கிறீர்கள். புதிய ஏற்பாட்டிலும் கூட வேறு அநேக சுவிசேஷங்கள் இருந்தன. பிறகு ஏன் நான்கை மட்டும் தெரிந்து கெண்டிருக்கிறீர்கள்? 

முதலாவதாக, நாம் லூக்கா 24 ம் அதிகாரத்தை வாசிக்கும் போது 25 முதல் 27 வசனங்கள் சொல்லுகின்றன்.   இயேசு சொல்லுகிறார், "தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளை விசுவாசிக்கிறதற்கு புத்தியில்லாதவர்களாக இருக்கிறீர்களே, நான் மரித்து, மரணத்திலிருந்து உயிரோடெழும்ப வேண்டும் என்பதை அறியாதிருக்கிறீர்களோ". மேலும் அவை கூறுகின்றன, அவர் மோசேயின் நியாயப்பிரமாணத்திலும், தீர்க்கதரிசிகளின் புஸ்தகங்களிலும், சங்கீதப் புஸ்தகங்களிலும் தன்னைக் குறித்து எழுதியிருக்கிறதைக் குறித்து விளக்குகிறார். எபிரேயத்தில் தௌரா, நெபீம், கெத்துபீம் என்று சொல்லுகிறோம் இவைகள் தான் பழைய ஏற்பாட்டின் 39 புத்தகங்களாகும். ரோமன் கத்தோலிக்கர்கள் நண்பர்கள் வேறு சில புத்தகங்களும் உள்ளன என்று ஒருவர் சொல்லலாம். ஆனால் 2 மக்காபியர் 2ம் அதிகாரம் 23, 24 முதல் 32 வசனங்கள் வரை, சொல்லப்படுகிறது மெய்யான தீர்க்கதரிசி எழும்பும் வரை நீங்கள் காத்திருங்கள். அதன் அர்த்தம என்னவெனில் மக்காபியர் புத்தககத்தின் ஆக்கியோன் அதை எழுதும் போதும் அங்கே மெய்யான தீர்க்கதரிசிகள் இருக்க வில்லை. மீண்டும் 1 மக்காபியர் 9: 27 மற்றும் 4: 41 சொல்லுகின்றன, மெய் தீர்க்கதரிசி வரும் வரை காத்திருங்கள். எனவே இந்த சேர்க்கைகள் எழுதப்படும் போது அங்கே மெய் தீர்க்கதரிசிகள் இல்லை என்று ரோமன் கத்தோலிக்க புத்தகங்களே கூறுகின்றன. மீண்டும் லூக்கா 24 ம் அதிகாரம் 44-46 வசனங்களில்        தன்னைப்பற்றி மோசேயின் நியாயப்பரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் புத்தகத்திலும் சங்கீதங்களிலும் எழுதியிருக்கிறவைகளைப் பற்றி இயேசு வெளிப்படுத்துகிறார் என்று சொல்லுகின்றன. எனவே பழைய ஏற்பாட்டின் 39 புத்தகங்களைத் தான் இயேசு உபயோகப்படுத்தியிருக்கிறார். மேலும் புதிய ஏற்பாட்டு ஆக்கியோன்கள் இந்தப் பழையஏற்பாட்டை 210 தடவை மேற்கோள்காட்டியிருக்கின்றனர். இயேசு எந்த ஒரு தள்ளுபடியாகமத்திலிருந்தும் குறிப்பை மேற்கோள்காட்டவில்லை. அப்போஸ்தலர்கள் எந்த தள்ளுபடியாகமத்திலிருந்தும மேற்கோள்காட்டவில்லை. எனவே பழைய ஏற்பாடானது 39 புத்தகங்களாக கிறிஸ்துவால் தீர்மானிக்கப்பட்டது. புதிய ஏற்பாட்டை பொறுத்தவரை ரோமன் கத்தோலிக்கர்களும், புரட்டஸ்டாண்டு கிறிஸ்தவர்களும் ஒரேமாதிரியான 27 புத்தகங்களையே கொண்டுள்ளனர். எனவே நமக்கு 66 புத்தகங்கள் இருக்கின்றன.


இப்போது, எம்.எம் அக்பருக்கான கேள்வி, ஷகியல் புக்கரி வால்யூம்  6 ஆம் அதிகாரத்தில் குரானின் புனிதம் என்ற பகுதியில் இவ்வாறு சொல்லுகிறது . முகமது நபி குரானை எழுதுவதற்கு 4 ஆட்களை நியமித்தார். உபயபின்காப், இப்னு மசூத், சலீம், ஜபல். ஜபலும், சலீமும் யமாமா என்ற போரில் கொல்லப்பட்டார்கள். ஆனால் மீதமிருந்து இரண்டுபேரில், இப்னு மசூதின் குரானில் 111 அதிகாரங்கள் இருந்தன, அதேசமயம் உபயபின்காப்பின் குரானில் 116 அதிகாரங்கள் இருந்தன. ஏன் எம். எம் அக்பர் தன்னுடைய குரானில் 114 அதிகாரத்தைக் கொண்டிருக்கிறார். இந்த இரண்டு எழுத்தர்களையும் முகமது நபி நியமித்தபோது (உபயபின்காப் மற்றும் இப்னு மசூத்) உபயபின்காப் தன்னுடைய குரானில் 116 அதிகாரங்களைக் கொண்டிருந்தார், இப்னு மசூத் வெறும் 111 அதிகாரங்களைக் கொண்டிருந்தார்.  குரான் சொர்க்கத்தில் எழுதப்பட்டதாக அக்பர் நம்புகிறார். எனவே சொர்க்கத்தில் அது 111 அதிகாரமா அல்லது 116 அதிகாரமா? 114 அதிகாரங்களை மட்டும் தெரிந்து கொள்ள அவருக்கு யார் அதிகாரம் கொடுத்தது? கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரையில், லூக்கா 24 ஆம் அதிகாரம் 27 மற்றும் 44 - 46 வசனங்களில் இயேசு சொல்லுகிறார், தௌரா, நெபீம், கெத்துபீம் ஆகிய 39 பழைய ஏற்பாட்டு புத்தகங்ளில் தெய்வீக வெளிப்பாடு இருக்கிறது. கிறிஸ்தவர்களாகிய நாம் அதை விசுவாசிக்கிறோம். குரானில் 114 அதிகாரங்கள் மட்டுமே உள்ளது என்று அல்லா எங்கே கூறியிருக்கிறார்.? 114 அதிகாரங்கள் தான் உள்ளது என்று முகமது எங்கே சொல்லியிருக்கிறார்? நீங்கள் எப்படி அதை உங்களுக்கு தீர்மானித்துக் கொண்டீர்;கள்? ஷகியல் புகாரி வால்யூம் 6 ம் அதிகாரம், 510 முதல் 514 வரை உள்ள ஹதீஸ்கள் சொல்லுகிறது "ஏராளமான குரான்கள் இருந்தன".  இங்கே என்னிடத்தில் 28 குரான்கள் இருக்கின்றன.  எம். எம். அக்பர் இந்த சவாலை ஏற்றுக் கொள்ள முடியுமா? நாங்கள் இப்போது அக்பருடைய வீட்டில், அவருடைய சொந்த ஊரில் இருக்கிறோம். அவருக்கு 28 குரான்கள் இருக்கும் போது ஏன் உஸ்மான் எல்லாக் குரான்களை எரித்து விட்டு ஒரே ஒரு குரானை மட்டு;ம் வைத்தார்? இந்த தலைப்பிலே வந்து வாதம் செய்வதற்கு எம். எம். அக்பருக்கு தைரியம் இருக்கிறதா? அவர் தன்னுடைய குரான் மெய்யானது என்று உண்மையிலே விசுவாசித்தால், நாங்கள் அவரை இந்த வாதத்திற்கு அழைக்கிறோம். 


video link

Tuesday, August 24, 2010

கர்பாலாவிலிருந்து கல்வாரிக்கு -Barakat Ullah



பாகிஸ்தானைச் சேந்த் மேற்கு பஞ்சாபின் எல்லைப் பிரேதஷ நகராகிய நரோலால் என்னும் ஊரில் ஷியா பிரிவைச் சேந்த ஒரு முஸ்லீம் குடும்பத்தில் நான் பிறந்தேன். இக்குடும்பத்தின் நேர்மை, பக்தி, சடங்காச்சாராம் ஆகியவற்றின் கராணமாகச் சமுதாயம் முழுவதும் அதை மிகுதியாக மதித்து வந்தது. என் பாட்டனாhர் தமது சொந்தப் பெயரால் அழைக்கப்படாமல் "ஜனாப்" என்றே அழைக்கப்பட்டார். மசூதி வேறு, அவர் வேறு என்று பிரிக்கப்படாதவராகக் கருதப்பட்டார். அவர் தமது கடையில் காணப்படாவிட்டால், மசூதியில்தான் காணப்படுவார், அவர் தமது மாலை தொழுகையை முடித்து விட்டு, வீட்டுக்குத் திரும்பியபின், குர்ஆனின் வசனங்களை வாசித்துக்கொண்டிருக்கும் போது, அவருடய அணைப்பில் ஆழ்ந்தவனாய் அவர் மடியில் அமர்ந்திருந்ததே, அவரைக் குறித்து எனக்குள்ள ஆதிஞாபகமாகும். என் பாட்டியார் பக்தி மிக்கவராயிருந்தமையால் அவர் மரித்துச் சமாதியடங்கிய பின், பல பெண்கள் தாங்களும் மரித்து அடக்கம் பண்ணப்படும் போது அம்மையாரின் காலடியில் தமக்கு தலைமாடாக வைத்துத் தம்மை அடக்கம் பண்ண வேண்டுமென்று வேண்டினர். இஸ்லாமுடைய நபிநாயகத்தின் பேரனாகிய இமாம் ஹ_சேன் கொல்லப்பட்டபோது திருநகராகிய கர்பாலாவுக்கு, என் பாட்டியாரின் சகோதரர் ஒருவர் யாத்திரை சென்றதுண்டு. 

எங்கள் குடும்பத்தவர் காலையில் தொழுகை செய்து குர்ஆனிலிருந்து சில திருவாசகங்களைச் சொன்ன பின்புதான் அவரவர் வேலையைத் தொடங்குவர். நான் நான்கு வயதாயிருந்தபோது, குர்ஆனை மனப்பாடம் பண்ணும்படியாக ஸைய்யத் ஷாஹ் ஸாகிபிடம் அனுப்பப்பட்டேன். அதே சமயத்தில் அவருடய மகள் என் சகோதரிக்குக் குர்ஆனைக் கற்பித்தாள். இரவு பிரார்த்தனையோடு எங்கள் வீட்டு அன்றாட வேலைகள் முடிவடையும். 

நான் வளர்க்கப்பட்ட வீட்டின் பண்பாடு இவ்விதமாக இருந்தது. நான் நான்கு வயதாயிருக்கும்போதே, கிறிஸ்தவ தொண்டர் நடத்தும் பள்ளிக்கு அனுப்பப்பட்டேன். தேர்வுகளில் நான் அடைந்த வெற்றியினால் அங்கிருந்து அப்பள்ளியைச் சார்ந்த ஆரம்ப நடுநிலைப் பள்ளிக்கு அனுப்பட்டேன். இவ்விரு பள்ளிகளிலும் கிறிஸ்தவப் போதனைகள் கற்பிக்கப்பட்டதோடன்றிச் சில சமயங்களில் ஏனைய பாடங்களைக் காட்டிலும் வேதபாடமே முக்கியமாகக் கருதப்பட்டது. எனக்கு நல்ல நினைவாற்றல் இருந்தமையால் நான் ஐந்தாம் வகுப்பையடைந்தபோது, பல கிறிஸ்தவர்களைக் காட்டிலும் பரிசுத்த வேதநூலை (பைபிள்) நன்கு அறிந்திருந்தேன் எந்த வருடத்திலும் நான் வேதாகப் பரிசு வாங்காமலிருந்ததாக எனக்கு ஞாபகமேயில்லை. 

என் தகப்பனராகிய ஷேய்க் ரஹ்மத் அலி பரந்த நோக்குடையவராகவும், எல்லா மதத்திற்கும் ஆதரவளிப்பவராகவும் விளங்கினார். ஹிந்துக்களும், கிறிஸத்வர்களும், முஸ்லீம் மதத்தின் எல்லா வகுப்புகளும நண்பர்களாயிருந்தனர். அவர் வாணிபம் செய்து வந்த போதிலும் ஒவ்வொரு நாளும் காலை நேரத்தில் அவர் பரிசுத்த வேதத்தையும் குர்ஆனையும் எப்படியாவது வாசித்து விடுவார். பாரசீகக் கவிஞர்களின் கவிகளையும், பாரசீக ஆசிரியர்களின் உரைநடை நூல்ககளையும் பெருவிருப்புடன் படிப்பார். அவருடைய தம்பியும் என் சிற்றப்பவுமாகிய மோஹ்ஸின் அலியோ, என் அப்பாவும் முற்றிலும் எதிர்மாறாக ஷீயா முஸ்லீம் கொள்ளகைகளை மிகவும் கண்டிப்பாகவும் வைராக்கியத்தோடும் கடைபிடித்தாh. குர்ஆனையும் அதற்குரிய விளக்க நூல்களையும் தவிர வேறெந்த மதநூல்களையும்  அவர் படிக்கவே மாட்டார். அவர் மெட்ரிக்குலேஷன் வரை கற்றிருந்தார். அக்காலத்தில் அச்சிற்றூரில் அது ஓh அரிய பெரிய படிப்பாக கருதப்பட்டது. அவர் தம் வீட்டில் ஓர் சிறு நூல் நிலையமும் வைத்திருந்தார். கிறிஸ்தவ சமயத்தையுமு; இஸ்லாமிய மதத்தில் வேறு பிரிவுகளையும் கண்டித்தும் மறுத்தும் கூறும் நூல்களே அதில் அடங்கியிருந்தன.

நான் என் பள்ளியில் வருடாவருடம் வேதாகப் பரிசுகள் பெறுவதையும், பல வேத வசனங்களை மனப்பாடமாய்க் கூறுவதையும் என் சிற்ற்ப்பா கண்டபோது, என்சமயப் பயிற்சயை இனி தாமே நடத்தவேண்டுமென்று கருதி எனக்குச் சில நூல்களை வாசிக்கும்படிக்கொடுத்தார். அச்சமயம் எனக்க வயது பன்னிரன்டு நான் ஆறாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தேன். என் சிற்றப்பா எனக்குக் கொடுத்த புத்தகங்களை நான் எளிதில் வாசித்துப் புரிந்து கொள்ளத்தக்கதாக சாதி " பிர்தௌஸி" என்னும் ஆசிரியர்கள் எழுதிய நூல்களிலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட சில பகுதிகளை நான் படித்துக் கொண்டிருந்தேன். அவர் எனக்கு வழங்கின புத்தகங்களில் சுப்தத் அல் அக்லாவீல்பீ தர்ஜிஹில் குர்ஆன் அல்லல் அனாஜீல் என்ற புத்தகம்தான் என் மனதை பெரிதும் ஆட்கொண்டது. இஸ்லாம் மத போதனைகளுக்கும் கிறிஸ்தவ மதப் போதனைகளுக்குமிடையேயுள்ள ஒப்புமைகளும் பரிசுத்த வேதநூலைக் கண்டனம் பண்ணும் கூற்றுகளின் எடுத்துக் காட்டுகளும் அந்நூலில் அடங்கியிருந்தன. நூளடைவில் இந்நூல் எனது இணைப்பிhயி நண்பனாகி விட்டது. இதை ஓர் ஆயுதம் போல் நான் தாங்கிக் கொண்டு கிறிஸ்தவர்கள் கடைவீதிகளில் நி;ன்று பிரசங்கித்துக்கொண்டிருக்கும்போது, அங்கு நான் போவதுண்டு, பல கேள்விகளால் அவர்களைத் தாக்கி, அவர்களுக்கு நான் அடிக்கடி குழப்த்தையுண்டு பண்ணினதுண்டு. 

கிறிஸ்தவ சமயத்தின் மீது வெறுப்பை உண்டுபண்ணும் இத்தகைய புத்தகங்களால் ஆட்கொள்ளப்பட்டவனாய் நான் ஒருமுறை பரிசுத்த மத்தேயு எழுதின சுவிசேஷத்தின் பிரதி ஒன்றைச் சுட்டெரித்தேன். எப்பெடியென்றால், ஓர் இரவு மண்ணென்னை விளக்கொளியில் நான் அதை வாசித்துக்கொண்டிரு;தேன். அதில் எப்பகுதியை வாசித்துக் கொண்டிருந்தேன் என்பது எனக்கு இப்பொழுது நினைவில்லை, ஆனால் அதை வாசித்துக்கொண்டிருக்கும் போது, விளக்குத் தீயை அதில் மூட்டி அதை எரித்தேன். நான் செய்த செயலைக் கண்டு என் தாயர் திடுக்கிட்டார். ஆனால் நானோ அது இஞ்சில் (சுவிசேஷம்) என்னும் நூலின் ஓர் பிரதிதான் என்று அவருக்குக் கூறினேன். அவர் போட்ட கூச்சலைக் கேட்டு என் தகப்பனார் அங்கு வந்தார். நான் செய்த் செயலைக் கண்டு என்னை மிகவும் திட்டினார். குர்ஆனை ஓர் கிறிஸ்தவன் சுட்டெரி;த்தால் நான் அதைப் பொறுப்பேனா என்று என்னைக் கேட்டார். என் முகத்தில் காணப்பட்ட திகிலை அவர் கண்டபோது, சாதி என்னும் நூலிலிருந்து உனக்கு பிறர் எதைச் செய்ய வேண்டாமென்று நீ கருதுவாயோ, அதை நீயும் பிறருக்குச் செய்யாதே, என்றும் மேற்கோளைக் கூறினார். அவ்வேளையில் என் சிற்றப்பா அங்கு வந்தார். தம் தமையனாருக்கு முன்பாக அவர் எதையும் சொல்லத் துணியவில்லை. என் தகப்பனார் அவ்விடம் விட்டு அகன்றபின், நான் செய்தது தகுதியான செயலென்றும், புகழ்மிக்க செயலென்றும் என்னை வாழ்த்தியதுடன் அது பாவச்செயலாகாதென்றும் வற்புறுத்தினார். 

ஷீயா, பிரிவினருக்கு முஹர்ரம் ஓர் புனித மாதமாகும். ஏனென்றால் இமாம் ஹ_சேன் கொல்லப்பட்ட மாதம் அது. ஒவ்வொரு வருடமும் முஹர்ரம் ஆரம்பிப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவே ஷீயா வகுப்பைச் சேர்ந்த பையன்கள் ஒன்று கூடித் தெருக்களுடே பவனி சென்று கொண்டு, தங்கள் மார்பில் அடித்துக் கொள்வர், அவ்வேளையில் என் நண்பர்கள் நால்வரும் நானும்

    ஹ_சேன்; ஹ_சேன் ஹ_சேன் ஹ_சேன்

    ஷாஹிதே கர்பலா ஹ_சேன்

என்று பாடிக்கொண்டே செல்வோம். ஒருமுறை நாங்கள் ஒரு ஸாக்கிரை (அதாவது ஞாபக்ப்படுத்துவோரை, அல்லது தெய்வத்தைத் துதிப்பவரை) லக்னோவிலிருந்து வரவழைத்தோம் அவர் சிறு கோலைக் கொண்டு வந்திருந்தார். அதன் ஓர் முனையில் பன்னிரண்டு சிறிய கூர்மையான கத்திகள் மாட்டப்பட்டிருந்தன. அவர் அக்கத்திகளைக் கொண்டு தம் தோள்களைக் கிழித்துக் கொண்டார். இதைக் கண்டு நான் ஆவேசமுற்று அக்கோலை அவர் கையிலிருந்து பிடுங்கி என் தோள்களைக் கீறிக்கொள்ள ஆரம்பித்தேன். இதைக் கண்ட என் மாமான்மாரில் ஒருவர் அதை என் கரத்திலிருந்து பறித்துக் கொண்டார். அந்நிகழ்ச்சிக்குப்பின், நான் வைராக்கியமும் பக்தியும் மிக்க சிறுவன் ன்று எனக்குப் பேரும் புகழும் உண்டாகி விட்டது. 

என் வாலிப பருவத்தின் இன்னொரு நிகழ்ச்சி என் மனதை விட்டு அகல்வதேயில்லை. ஒருநாள் கிறிஸ்தவ ஊழியர்கள் சிலர் கடைவீதியில் பிரசங்கித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களோடு திரு. தோமா என்பவர் உத்தரப்பிரேதசத்திலிருந்து வந்திருந்தார். துணிகளுக்கு சாநய்தோய்க்கும் ஒருவனுடைய கடைக்கு அருகில் நின்று அவர் பிரசங்கித்துக் கொண்டிருந்தார். முஸ்லீம் சமயத்தைச் சேர்ந்த, பருத்த உடல் கொண்ட அந்தக் கடைக்காரன், கடையிலிருந்து வெளியில் வந்து, பிரசங்கியாருக்கு முன்னால் போய் நின்று அவர் முகத்தில் துப்பி, அவர் கன்னத்தில் பலமாக அறைந்தான். இதன் விளைவாக இருவரும் கைகலந்து சண்டையிடுவர் என்று அங்கு கூடியிருந்த மக்கள் எதிர்பார்த்தனர். ஏனென்றால் திரு. தோமா அவர்களும் நல்ல தேகக் கட்டும் வலிமையும் வாய்ந்தவராயிருந்தார். ஆனால் அவரோ, தமது கைக்குட்டையை வெளியிலெடுத்துப் பொறுமையாகத் தமது முகத்தை துடைத்துக்கொண்டு "கடவுள் உன்னை ஆசீர்வதிப்பார்" என்று கூறிவிட்டுத் தமக்கு யாரும் எத்தீங்கும் இழைத்திராததுபோல் தொடர்ந்து பிரசங்கஞ் செய்தார். சாயக்காரன் தலைகவிழ்ந்து வண்ணமாகத் தன் கடைக்குத் திரும்பினான். திரு. தோமா அவர்கள் அவ்வேளையில் நடந்துகொண்ட விதம் எல்லோரையும் வியக்கச் செய்தது. அது என் உள்ளத்தையோ ஓர் பெரிய அசைப்பு அசைத்து விட்டது. காரணம் யாதெனில, இயேசுவானவர் மலைமீது செய்த பிரசங்கத்தில் " உங்கள் சத்துருக்களில் அன்பு கூருங்கள்" என்று கூறியுள்ளதை மெய்யாகவே யாரும் கைக்கொள்ள முடியாதென்றும், அதனால் அப்பிரசங்கம் யாருக்கும் உடன்பாடாகதென்றும் நான் பலமுறை கூறியிருந்ததுண்டு. 

நான் எட்டாம் வகுப்பை முடித்தவுடன் கிறிஸ்தவத் தொண்டர்கள் நடத்தும் உயர்நிலைப்பள்ளிக்கு என் வீட்டிலிருந்து அனுப்பப்பட்டேன். இப்பள்ளியிலும் ஒவ்வொரு வேதபாடப் பரிசையும் நானே பெற்று வந்தேன். நூர்முகம்மது என்ற பெயர் கொண்ட ஓர் முஸ்லீம் பையன் கிறிஸ்தவனாக விரும்பினான். ஆனால் நானோ அவனிடஞ்சென்று அக்கருத்தை அறவே விட்டுவிடும்படிச் செய்தேன். சமயச் சார்பான காரியங்களில் என்னை ஓர் நிபுணனாக மாணவரும் ஆசிரியரும் மதித்தனர். சுவிசேஷம் பிரசங்கிக்கப்படும் கடை வீதிகளுக்கெல்லாம் நான் சென்று பிரசங்கிமாரிடம் மனக்குழப்பத்தை தரவல்ல கேள்விகளைக் கேட்டு, இவ்விதமாகக் கூட்டத்தில் குழப்பத்தை உண்டு பண்ணிவந்தேன். 

நான் படித்துவந்த உயர்நிலைப்பள்ளி அமைக்கப்பட்டிருந்த நகர் எல்லாப் பாவங்களுக்கும் பெயர் பெற்றதாயிருந்தது. ஆதனால் நானும் கறைபடாமலிருக்கவில்லை@ கறைபடாமலிருக்கவுமுடியவில்லை. அப்பொழுது நான் வாலிப் பருவத்தை எட்டிக்கொண்டிருந்தேன். எளிதில் வாலிபரைத் தவறச் செய்யக்கூடிய வயது அது. என் பள்ளியின் சுற்றுச் சார்புகளும், நான் வசித்துவந்த விடுதியின் சூழ்நிலையும் பாவம் நிறைந்தவைகளாயிருந்தன. ஆசிரியத் தொண்டை பலகாலமாக ஆற்றிக் கொண்டிருந்த ஆசிரியர்கள் சிலவரும் அவ்விடுதியில் வசித்து வந்தனர். அவர்களில் ஒருவர் துன்மார்க்கத்தில் பெயர் பெற்றவர். இந்தப் பயங்கரமான சூழ்நிலையில் என் பாவத்தைக் குறித்து நான் ஆழ்ந்த உணர்ச்சியடைந்தேன். எப்படியாவது பாவமன்னிப்பைப் பெற வேண்டுமென்றும், செம்மையும் தூய்மையுமான வாழ்க்கையை நான் மீண்டும் அடையவேண்டுமென்றும் உணர்ந்தேன். அருகிலிருந்து மசூதிக்குச் சென்று ஒழுங்காக என் தொழுகையை நிறைவேற்றுவதுடன் பாவத்தின் வல்லமையிலிருந்தும், பிசாசின் அடிமைத்தனத்திலிருந்தும் எனக்கு விடுதலையளிக்கும்படியும கடவுளை வேண்டினேன். ஆனால் என் வேண்டுகோளுக்கோ பதில் அளிக்கப்படவேயில்லை. குர்ஆனைப் படித்துப் பார்த்தேன். எதுவும் எனக்குப்ப பாவத்தினின்று விடுதலையளிக்கவேயில்லை. நாளுக்கு நாள் என் பாவ உணர்ச்சி அதிகரித்தது@ என்னை பாவத்தினின்;று விடுவிக்ககூடியது யாது? என்ற கூக்குரலே என் உள்ளத்திலிருந்து ஓயாது எழுந்து கொண்டிருந்தது. என் படிப்பு வேளை முடிந்த போதெல்லாம் மௌலவிகளிடம் சென்றேன் தீய மனதையுடைய பையன்களின் தொடர்பை அறவே விட்டுவிட்டேன். நல்ல பையன்களோடு நட்புக்கொண்டேன். சிறந்த முஸ்லீம் குருக்களிடமும் கேட்டேன@ நான் என்னதான் பரிகாரம் தேடினபோதிலும் பாவவுணர்ச்சி என்னைவிட்டு நீங்கவேயில்லை. அது என் உள்ளத்தை விடாது அரித்துக் கொண்டேயிருந்தது. 

அப்பொழுதுதான் என் வாழ்க்ககை புதிய பாதையில் திரும்பிற்று. எவ்வாறென்றால், நான் ஒன்பதாம் வகுப்பில் முதல் நிலையில் உயர் மதிப்பெண்களுடன் தேறியிருந்த மகிழ்ச்சிமிக்க செய்தியை என் பெற்றோருக்கு அறிவிக்கப் போய்க்கொண்டிருந்தேன். ஊருக்குள் புகுந்த போது உவகைமலர்ந்த முகத்துடன் காணப்பட்டேன். ஆனால் வீட்டிற்குள் நுழையும் முன்பே, எங்கும் துக்கம் குடிகொண்டிருப்பதைக் கண்டேன். என் சிற்றப்பாவாகிய மோஹ்ஸின் என்பார் தலைவாயிலில் நின்று கொண்டிருந்தார். அவர் என்னை தனியே அழைத்துச் சென்று, என் தந்தை கிறிஸ்தவ சமயத்தைத் தழுவிவிட்டார் என்றும், அவ்வளவு காலமும் அவர் அஞ்சுமானே இஸ்லாமியா குழுவின் தலைவராயிருந்தமையால் நகர் முழுவதும் அவருக்காகப் புலம்பிக் கொண்டிருந்ததென்றுங் கூறினார். இதைக் கேட்டவுடன் யானடைந்த மன மடிவினால் கால் தள்ளாடிக் கொண்டே வீட்டினுள் சென்றேன்.



அவ்வேளையில் என் தக்பபனார் வீட்டில் இல்லை, என் தாயரும் என் இரு சகோதரிகளும் இரு சகோதரர்களுமிருந்தனர், அவர்களும் கிறிஸ்தவர்களாயிருந்தனர். அவர்களெல்லாரும் ஓடிவந்து என்னை அணைத்துக் கொண்டனர். நாங்கள் ஒன்றுகூடின உவகையில் என் உள்ளத்தை வருத்திய துயரைக் கூட மறந்து விட்டேன். அவ்வேளையில் என் சித்தப்பா வந்து என்னைத் திரும்பவும் தனியே அழைத்துச் சென்று இனி நீ

முஷ்ரிக்குகள் (பொய் மதத்தார்) நிறைந்த இக்குடும்பத்தில் இவர்களோடு ஒன்றுப்பட்டிருக்கக் கூடாது. நான் உன்னை என் புதல்வனாக சுவீகரித்து, என் மக்களைக் காட்டிலும் உன்னை அதிகமாக நேசிப்பேன். நான் உன்னை எம்.ஏ. வகுப்பு வரை படிக்க வைப்பேன். உனக்கு எவ்வித இடர்பாடும் வராதபடி உன்னைக் காத்துக் கொள்வேன், என்றார். அவர் சொன்னபடியெல்லாம் செய்வார் என்பது எனக்கு நன்கு தெரியும். ஆனால் நானோ அதற்கு உடன்படவில்லை. என் தகப்பனார் கிறிஸ்தவராயிருந்தாலும் கூட நான் அவரோடு ஓர் சிறந்த முஸ்லீமாக வாழ்வேன் என்றும் எல்லா நியாயமான முறைகளிலும் ஓர் நல்ல புதல்வனாக அவருக்கு கீழ்படிந்திருப்பேனென்றும் கூறினேன். என் தகப்பனார் வீட்டிற்கு திரும்பின போது என்னைக் கண்டு மகிழ்ச்சியுற்றார். ஆனால் நகரத்தார் அவருக்கு இழைத்திருந்த கொடுமையினால் அவர் முகத்தில் கோடுகள் விழுந்திருப்பதைப் பார்த்தபோதோ, என் உள்ளம் மிகுதியாக வேதனையுற்றது. நான் சித்தப்பாவுக்குக் கூறின விடைய அவர் கேட்டபோதும் பெருமகிழ்ச்சயைடைந்தார். 

இரண்டு நாட்கள் கழிந்தபின் நகரின் முதியோர்களாலாகிய குழுவிற்கு நான் அழைக்கப்பட்டேன். ஓர் பெரியாரின் வீட்டில் அக்குழு கூடிற்று. அவர்தான் பின்னாளிள் எனக்கு மாமனாரானவர், அவர் என் கரத்தைப் பற்றிக் கொண்டு, நான் தகப்பனாரைப் போல் கிறிஸ்தவனாகாவிடில், என்னை எம்.ஏ வகுப்பு வரை படிக்கவைப்பதாகக் குர்ஆனின் மீது சத்தியம் செய்தார். அதற்கு நான் விடையாக அங்குக் கூடியிருந்த எல்லோரையும் நோக்கி, இஸ்லாமிய மதத்தைத் துறக்கும் எண்ணம் எனக்கு இல்லையென்றும், என் பெற்றோர் எவ்வித ஈன லாபத்தையுங் கருதி கிறிஸ்தவ சமயத்தை தழுவியிருக்க முடியாதென்றும், அவ்வுண்மையை முதியோர் அறிவர் என்றும் கூறினேன். அவர்கள் என் தந்தையாரின் கருத்தை சிறிதும் சந்தேகிக்கவில்லை என்று கூறினர், என்ற போதிலும் தங்கள் குழுவின் தலைவர் முஷ்ரிக் (பொய் சமயத்தார்) ஆக மாறுவதைத் தங்களால் சும்மா பார்த்துக்ககொண்டிருக்க முடியாதென்றும், தங்கள் மத்தையும் சமுதாயத்தையும் காப்பது தங்கள் பொறுப்பென்றும் கூறினர். இதைக் கேட்ட நான் அவர்கள் கூற்றினால் வருந்துவதையும் இஸ்லாமிய மதத்தில் நான் நிலைத்திருக்கும்படி அவர்கள் எனக்குக் கையூட்டளிக்க முயன்றார் என்றும் கூறினேன். 

   அன்று நானும் என் தந்தையாரும் எங்கள் உள்ளத்தில் இருந்ததை ஒளிக்காமல் உரையாடினோம். தாம் கிறிஸ்தவ மதத்தைத் தழுவித் திருமுழுக்குப் பெற்றதைக் குறித்து தெரிவித்தால் பரீட்சை சமயத்தில் நான் கலவரம்; அடைந்து விடுவேன் என்று அஞ்சித்தான் எனக்குத் தெரியப்படுத்தவில்லை என்று கூறினார். அவர் இருபது ஆண்டுகளாக சத்தியத்தைத் தேடிக்கொண்டிருந்ததாகவும், இறுதியில் கிறிஸ்துவில்தான் அதைத் தாம் கண்டதாகவும்  கூறினார். நான் முதியோர்களிடம் கூறின தீர்மானத்தைக் கேட்டு மகிழ்ந்தார். என் தந்தையாரின்

சாந்தமும், அமைதியும், பெருமிதமும், தமது துன்பங்களையும் அவர் அன்போடும் பொறுமையோடும் சகித்த விதமும்,நகரத்தார் அவருக்கிழைத்த கொடிய துன்பங்களின் செய்தியும் என் மனத்தையுருக்கின. ஏன் தகப்பனாரின் உள்ளத்தைக் கொள்ளைகொண்ட அந்தப் புதிய ஏற்பாட்டில்

(இன்ஜில்) என்ன இருக்கிறது என்பதை வாசித்து அறியும்படித் தீர்மானித்தேன்.



  உடனே, என் தகப்பனார் தாமே என் வாசிப்பை வரையறுத்து நடத்த ஆரம்பித்தார். அவர் எனக்குக் கொடுத்த புத்தகங்களில் ஃபாந்தர் என்பார் எழுதின மிஸானுல் ஹக்கும் திஸதால் எழுதின கிறிஸ்தவ சயத்திற்கு முகம்மதிய மறுப்புரையும், இமாதுத்தின் எழுதின நூல்களும் இருந்தன. அவைகளை நான் கருத்தாகப் படித்தேன் இவற்றின் மூலமாகவும், இவற்றிற்கியைனாயான ஏனைய நூல்கள் மூலமாகவும்,

சுவிசேஷங்கள் கிறிஸ்துவின் உண்மையான கூற்றுகளைக் கொண்ட உண்மையான நூல்கள் என்பதை உணர்ந்தேன். இயேசு கிறிஸ்துவின் தெய்வத்துவம், சிலுவை பிராயச்சித்தம், திரித்துவம் என்பவற்றினைக் குறித்து என் உள்ளத்தில் எழுந்த கேள்விகள் மட்டும் நான் திருமுழுக்குப் பெறுவதற்குத் தடையாயிருந்தன. என் தந்தையார் எனக்கு வேறு நூல்களும் கொடுத்தார். ஆனால் அவைகளோ நான் புரிந்துகொள்ளக்கூடாத விதமாக உயர்நடையில் எழுதப்பட்டிருந்தன. என்றபோதிலும் எனக்குப் புரியாத தத்துவங்களை எனது விசுவாசப் பிரமாணமாகக் கொள்ளும்படியாகவும், காலம் வரும்போது அவைகளை நான் புரிந்து கொள்ளக் கூடுமென்றும் என் தந்தையார் கூறினார். கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை நான் படித்தபோது, என் தந்தையாரை நானும் பின்பற்றிக் கிறிஸ்துவை என் மீட்பராக ஏற்றுக்கொள்ளள வேண்டுமென்ற நாட்டம் என் உள்ளத்தில் உண்டாயிற்று. தீர்க்கதரிசிகள் அனைவரிலும் இயேசு கிறிஸ்து ஒருவர் மட்டும் பாவத்தை வென்றார் என்றும், அவருடய உயிர்த்தெழுதலின் வல்லமையினால் அவ்வுண்மை வெளியாயிற்று என்றும், ஆகவே என்னை விடாது வருத்திக்கொண்டிருந்த என் பாவங்களின்று அவர் ஒருவரே என்னை மீட்கக் கூடுமென்றும் நான் உணர்வை அடைந்தேன். 

திடீரென்று கல்வாரிச் சிலுவையின் திருப்கடவுள் என் பாவங்களை மன்னித்துவிட்டார் என்ற உணர்வடைந்தேன். நான் திருமுழுக்குப் பெற்ற போது பாவப் பெருஞ்சுமை என் தோள்களிலிருந்து நீக்கப்பட்டதாக உணர்ந்தேன். என்ன மகிழ்ச்சி. நான் பாவ மன்னிப்படைந்துவிட்டேன் என்று உணர்ந்துவுடன்  என் வாழ்க்கையில் சாந்தியும் அமைதலும் உண்டாயின. இவ்வனுபவம் எனக்கு புதிதாயும், முழுவதும் விளக்கிக் கூறக்கூடாததாயுமிருந்தது. பொருள் எனக்கு நன்கு புலனாயிற்று, பாவமில்லா ஆண்டவராகிய இயேசு என் பாவங்களுக்காகச் சிலுவையில் மாண்டார் என்ற உண்மையின் மூலம் 

பாவமன்னிப்பையும் கிறிஸ்து இயேவுக்குள் புது வாழ்வையும் நான் கண்டடைந்தபோது, இளைஞனாயிருந்தேன். அதன்பின் இத்தனை ஆண்டுகளாக நான் அனுபவித்த என் கிறிஸ்தவ அனுபவத்தைத் திரும்பிப் பார்க்கும் போது நான் தகுதியற்றவனாயிருந்தபோதே கடவுள் எனக்கு எவ்வளவாய்த் திருவருள் புரிந்தார் என்ற உணர்வினால், என் உள்ளம் நன்றியறிதலால் நிறைகிறது. எனக்கு அறிவும் வயதும் அதிகரிக்க அதிகரிக்க, அதோடு என் மனப்பாண்மையும் விரிவடைய  என் வாழ்க்கையில் மெய்யான கிறிஸ்தவ அனுபவமும் அதிகரித்துள்ளது. பாவத்தில் அழிந்துபோன மனுக்குலத்திற்குச் சிலுவையில் அறையுண்டு, மரித்து, மூன்றாம் நாளில் உயிரோடெழுந்த கிறிஸ்துவினால் மட்டுமே மீட்பின் நம்பிக்கையுண்டு என்ற உணர்வு எனக்கு மிகுதியாய் ஏற்பட்டுள்ளது. பாவத்திலிரு;து விடுதலையும், தூய்மையும் நற்குணமும் பொருந்திய வாழ்க்கையடைதலும், அவாரால் மட்டுமே வாய்க்கக்கூடும்.

என் சிந்தனைகளையும் அனுபவங்களையும் என் முஸ்லீம் சகோதரார்களுக்கு கூற வேண்டுமென்ற ஆவல் எனக்கு எப்பொழுதுமே உண்டு. இயேசுவில் பொருந்தியுள்ள சத்தியத்தை அவர்கள் காண வேண்டுமென்று நான் பல புத்தகங்கள் எழுதியுள்ளேன். கல்வாரிச் சிலுவையிலிருந்து பெருக்கெடுத்துப் பாயும் மகிழ்ச்சியையும் ஜீவனையும் அவர்களும் என்னோடு அனுபவிக்க வேண்டுமென்பதே என் நோக்கமாகும். என் வயது முதிரும் இக்காலத்தில் நமது ஆண்டவரும் உலக இரட்சகருமாகயிய இயேசு கிறிஸ்துவில் நான் இவ்வளவு காலமும் அனுபவித்த இரட்சிப்பின் சந்தோஷம் அவர்களுக்கு வாய்க்க வேண்டுமென்று விண்ணப்பித்துக்கொண்டிருக்கிறேன்.

Monday, August 23, 2010

கிறிஸ்தவர்களுடனான நேரடி விவாதத்தை தவிர்க்கும் Dr. ஜாகிர் நாயக்: Dr. Zakir Naik Evades SAN Debate Invitation

 Dr. ஜாகீர் நாயக் SAN  ன் விவாத அழைப்பை தவிர்க்கிறார்.  

Dr. ஜாகீர் நாயக் கடந்த நாட்களில் பிரபல கிறிஸ்தவ அறிஞர்கள் சகோ. சாம் ஷாமோன், சகோ. ஜேமஸ் வைட் மற்றும் சகோ. டேவிட் வுட் மேலும் இந்துமத ஆரிய சமாஜ்ஜம் மற்றும் நாத்திக அலி சீனா ஆகியேரின் விவாத அழைப்புகளை ஏற்காமல் ஒதுங்கியது போல இப்போது SAN பிரதிநிதிகளையும் விவாதத்தில் சந்திக்க விருப்பமற்றவராக இருக்கிறார். பின்வருபவை IRF க்கும் SAN க்கும் இடையே நடந்த தகவல் பரிமாற்றங்கள். ஜூலை 22, 2010 வியாழனன்று சாக்ஷி அப்பாலஜெட்டிக் நெட்வொர்க் Sakshi Apologetics Network (SAN) லிருந்து ஒரு  பிரதிநிதிக் குழு மும்பையில் உள்ள IRF  அலுவலகத்திற்கு நேரில் சென்று விவாத அழைப்பைக் கொடுத்தது. ஜூலை 26, 2010 திங்களன்று, SAN பிரதிநிதிகளோடு விவாதிக்க தங்களுக்கு விருப்பமில்லை என்று IRF தெரியப்படுத்தினது. ஜூலை 27, 2010 செவ்வாயன்று விவாத அழைப்பை வெளிப்படையாக விட்டு IRF ன் தந்திரங்களுக்கு பதில்அளித்தது. கீழே வரும் பத்திகள் மேலே குறிப்பட்ட தகவல் பரிமாற்றங்களாகும். .

1. சாக்ஷி அப்பாலஜெட்டிக் நெட்வொர்க் SAN மிடமிருந்து IRF க்கு:Copy of the Letter of Debate Invitation from Sakshi Apologetics Network (SAN) to IRF
 
திரித்துவ தேவனாகிய யொகோவா, தீர்க்கதரிசிகள் அழைத்த உண்மையான ஒரே தேவன்@ இயேசு கிறிஸ்துவாக அவதரித்தவர் எல்லா முழங்காலும் அவருக்கு முன்பாக முடங்கி எல்லா நாவுகளும் அறிக்கை செய்யக் கூடிய அவருடைய நாமம் மகிமைப்படுவதாக.
எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்கு தேவ பெலமுள்ளவைகளாயிருக்கிறது. அவைகளால் நாங்கள் தர்க்கங்களையும், தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையையும் நிர்மூலமாக்கி, எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்படியச் சிறைப்படுத்துகிறவர்களாயிருக்கிறோம். 2 கொரிந்தியர் 10: 4-5

                                                      
To,        
                                                                        Date: 22 July 2010
Janab Dr. Zakir Naik,
President, IRF,
Mumbai.

Dear Brother Janab Dr. Zakir Naik,

அன்புச் சகோதரர் ஜனாப். Dr. ஜாகீர் நாயக் அவர்களே, சாக்ஷி அப்பாலஜெட்டிக் நெட்வொர்க் SAN லிருந்து வாழ்த்துக்கள்.

இந்தக் கடிதமானது இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ சமுதயாத்தின் பொதுவான விருப்பமுள்ள தலைப்புகளின் கீழ் பதிவு செய்யப்படும் ஒரு திறந்த வெளி விவாதத்திற்கு உங்களை அழைப்பதாகும்.

இந்த அழைப்பிதழின் நோக்கமும் பின்னனியமும்:

மதங்களின் ஒப்பாய்வுப் பற்றி குறிப்பாக இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவத்தைப் பற்றிய உங்கள் வாதங்கள் மற்றும் கேள்விகளை எழுப்பி நீங்கள் பேசியவற்றையெல்லாம் குறித்து இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ நணபர்கள் எங்களுக்கு தெரியப்படுத்தினார்கள் நாங்களும் தனிப்பட்ட விதத்தில் அவைகளைக் கண்டிருக்கிறோம். மற்ற தாவாக் குழுக்களின் ஏராளமானக் கேள்விகளுக்கு நாங்கள் பதிலளித்து பொது ஜனத்தின் சந்தேகங்களை ஆதாரங்களோடு நிவிர்த்தி செய்திருப்பதால் எல்லாருக்கும் நன்மையளிக்கும் தலைப்புகளில் உங்களுடனும் நாங்கள் விவாதிக்க வேண்டும் என்று கிறிஸ்தவ மற்றும் முஸ்லீம் நண்பர்களால் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறோம். அதன் மூலம் சத்தியம் தெளிவாக நிலை நாட்டப்படும். நாங்கள் இந்த விவாதத்தை நடத்த நோக்கமாயிருக்கிறோம் ஏனெனில் மிகத் திரளான பொது மக்கள் இந்த இரண்டு மார்க்கங்களையும் சரியாக ஒப்பிட்டுப் பார்க்கவும் இறைவனுக்கு சித்தமானால் உண்மையான சத்தியத்தைப் பின்பற்றுவதற்கு ஒரு புரிந்து கொண்ட முடிவை எடுப்பதற்கும் ஒரு நல்ல வாய்ப்பை பெறுவார்கள் என்பதாகும்.
இந்த நோக்கத்தோடு, இணையதளத்தில் உள்ள உங்கள் இமெயில் " islam@irf.net"  மூலம் ஒரு விவாதம் நடத்த உங்களைத் தொடர்பு கொள்ள SAN  எத்தனையோ முறை முயற்சித்தது ஆனால் எந்த பதிலையும் திரும்ப பெறவில்லை. நீங்கள் அதைக் கண்டிருக்கவில்லையோ என்று எண்ணி இந்த விவாத அழைப்பை நேரடியாகவே உங்களிடம் கொடுக்கிறோம்.

விவாதத்திற்கென்று தெரிந்துகொள்ளப்படுகிற தலைப்புகள்.  

பொது மக்களுக்கு அறிவையூட்டும் எண்ணத்தோடு பின்வரும் தலைப்புகளில் ஏதாகிலும் ஒன்றை (அல்லது முழுவதையும்) தெரிந்தெடுக்க இருக்கிறோம்.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அல்லது ஹஸாரத் முகமது : மனித இனத்திற்கான உண்மையான நல்லொழுக்க மாதிரி யார்?

வேதாகம மற்றும் இஸ்லாமிய நம்பிக்கையில் மரண்த்திற்கு பிறகு வாழ்க்கை : எது நிதியானது மற்றும் ஆவிக்குரியது?
 
கிறிஸ்தவமா இஸ்லாமா: மனித இனத்திற்காக உண்மையான இறுதி தீர்வு எது?

வேதத்தின் யெகோவா தேவன் அல்லது குரானின் அல்லா : யார் உலக்தின் ஒரே உண்மையான இறைவன்?

தீர்மானிக்கப்படும் தேதிகள்: 

இந்த விவாதம் இருதரப்பிற்கும் வசதியான தேதி மற்றும் இடத்தில் ஏற்படுத்தப்படும். இருப்பினும் சற்று துரிதமாக முடிவெடுப்பதற்காக இரு தரப்பிற்கும் வசதியான ஏதாவது சனிக்கிழமைகள் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் (ரமலான் மாதத்திற்கு பின் மற்றும் கிறிஸ்மஸ் நாட்களுக்கு முன்னதாக) அல்லது 2011 ஜனவரியிலிருந்து மே மாதம் வரையிலான ஏதாவது வசதியான சனிக்கிழமைகளைத் தெரிந்து கொள்ள கேட்கிறோம். உங்கள் தரப்பிலிருந்த ஏதாவது மூன்று விருப்பங்களை தயவாக தெரிந்து கொள்ளுங்கள்.

SAN சார்பாக விவாத்தில் கலந்து கொள்ளும் பிரதிநிதிகள்:

எங்கள் விவாத பிரதிநிதி சகோ.ஜெரி தாமஸ்.  சகோ. ஜெரி தாமஸ் SAN  உடைய தொடக்க உறுப்பினர் மற்றும் அதன் தலைமை ஆலோசகராவார். இந்தியாவின் ஏழு மாநிலங்களில் அதன் பணிகள் நடைபெறுகிறது. மேலும் அவர் ஒரு   Board Member of a trans-denominational theological college மற்றும் ஒரு பிரபல கிறிஸ்தவ பப்ளிக்கேஷனுடைய சங்க நிர்வாகியாவார். பிரபல தாவா பிரச்சாரர்களான சகோ. ஆசிஃபுதின் முகமது  (President of IACR, Hyderabad) மற்றும் இம்ரான் (President of IREF, Hyderabad). ஆகியோருடனான இவரது விவாதம் மிகவும் சக்தி வாய்ந்ததாக இருந்தது. சகோ. ஜெரியின் நிகழ்ச்சிகள் இந்தியாவில் ஒரு பெரியக் கிறிஸ்தவச் சேனலான ரக்ஸனா (RakshanaTV) தொலைக்காட்சியில் பல முறை ஒளிபரப்பப்பட்டிருக்கிறது. மற்றொரு தாவா பிரச்சாரகர்  ஜனாப் எம்எம். அக்பருக்கு(Director of Niche of Truth),  இவர் வெளிப்படையாக மறுப்பு கொடுத்துப் பேசியது கேரளாவில் இருக்கும் கிறிஸ்தவ மற்றும் முஸ்லீம் சமுதாயத்தினர் மத்தியிலே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும் இவர் டாவின்சிக் கோடு க்கு மறுப்பு, ஓரினத் திருமணத்திற்கு மறுப்பு போன்ற கிறிஸ்தவ மார்க்க தலைப்புகளில் ஏராளமான கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறார். அதைப் போல நீதிபதி சோம்சேகர் கமிஷனுக்கு முன்பு இந்துக்களால் எழுப்பப்பட்ட ஏராளமான இறையியல் கேள்விகளுக்கு பதிலளித்தார். தன்னுடைய கிறிஸ்தவ விசுவாசத்தின் ஒரு உணர்வுப்பூர்வ பாதுகாவலராக சகோ. ஜெரி, சுவாமி தயானந்த சரஸ்வதியால் (Arya Samaj)  அவருடய உண்மையான ஒளி (Satyarth Prakash) என்ற புஸ்தகத்தில் ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தின சுவிசேஷம் வரை எழுப்பட்டிருந்த எல்லாக் கேள்விகளுக்கும் பதில் கொடுத்திருக்கிறார். அந்த புஸ்தகம் புராண இந்துமதம் மற்றும் இஸ்லாம், கிறிஸ்தவத்தைப் பற்றி விமர்சனங்களைக் கொண்டது. இதற்கு அப்பாற்பட்டு உலக பத்திரிக்ககை, அமரிக்காவின் ஐந்தாவது பெரிய வார நாளிதழ் போன்றவற்றில் பேட்டிகளும் கல்வி சார்ந்த அமைப்பில் ஏராளமான நிறுவனங்களி நேரடி கலந்துரையாடல்களும் அளித்துள்ளார்.

தீர்மானிக்கப்படும் ஒப்பந்தம் :Proposed Modalities/Agreement


நாம் கலந்தாலோசித்து நடத்தை விதிகளையும் மற்ற உடண்பாடுகளையும் குறித்து முடிவு செய்யலாம். இருப்பினும் விவாதம் பற்றிய சற்று துரிதமான முடிவுக்காக சில உத்தேசிக்கப்படும் உடண்பாடுகளை இதோடு பிற்சேர்க்கையாக இணைத்திருக்கிறோம்.

தீர்மானிக்கப்படும் இடம்

பின்வரும் இடங்களில்; ஒன்றை அதன் வசதிக்கேற்ப அல்லது இருதரப்பிற்கு இணக்கமான வேறொரு இடத்தையோ தெரிந்து கொள்வதையும்  அதன் செலவீனங்களையும் பொறுப்பேற்கவும் அளிக்கிறோம்.

அ) கொச்சின் (கேரளா) - ஏதாவது ஒரு திறந்த அரங்கம் அல்லது மைதானம். ஆ) பெரிய ஹைதராபாத் (ஆந்திரபிரதேஷ்) - ஏதாவது ஒரு பொது அரங்கம் அல்லது மைதானம். பின்வரும் முகவரியில் தயவாக ஜூலை 30, 2010 அல்லது அதற்கு முன்னதாக பதில் தெரிவிக்கவும். ஜீலை 30, 2010 வரையிலும் உங்களிடமிருந்து எந்த தகவலும் வரவில்லையென்றால், இந்த விவாதத்திற்கு உங்கள் தரப்பிலிருந்து நீங்கள் விருப்பமற்றவர்களாயிருக்கிறீர்கள் என்று எண்ணிக் கொள்வோம். கீழே கொடுக்கப்பட்டுள்ள இமெயில் முகவரிக்கு நீங்கள் மின் அஞ்சல் அதை பெரிதும் வரவேற்போம்.

மேலும் உங்களுக்கு ஏதாவது தகவல் தேவைப்படுமானாலும் தெரியப்படுத்தவும்.

Our Contact Details:

Address Bro. George John, Administrator, Sakshi Apologetics Network,IPC Bethel Prayer Center, Vaikom, P.O,Kottayam, Kerala- 686141

Website: www.sakshitimes.org
Email: sakshi.apologeticsnetwork@gmail.com
Mobile: 09539797833

Thanking you,

Your brother in humanity,

For Sakshi Apologetics Network George Antony Paul


சாக்ஷி அப்பாலஜெட்டிக் நெட்வொர்க் மற்றும் ஐஆர்எப் - ன் பொது விவாதத்திற்கான ஒப்பந்தம்

சாக்ஷி அப்பாலஜெட்டிக் நெட்வொர்க் (SAN) மற்றும் இஸ்லாமிக் ரிசர்ச் பவுண்டேஷன் இடையே ஏற்பட்ட பரஸ்பர தகவல் பரிமாற்றத்தின் படி இரு சாராரும் ஒரு பொதுவான அறிவுச்சார்ந்த விவாத்தை கேரளாவின் கொச்சின் ஆந்திரப்பிரதேஷின் பெரிய ஹைதராபாத்தில் நடத்துவதற்கு ஒப்புக்கொண்டிருக்கின்றனர். நேரடி கலந்தாலோசித்தல் மற்றும் தகவல் பரிமாற்றத்தின் போது SAN மற்றும் IRF தங்களின் இந்த பொது விவாதத்திற்கு முக்கிய நோக்கமாக தெரியப்படுத்தியிருப்பது என்னவென்றால், இந்திய சட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள உரிமையின் படி ஜனங்களை அமைதியாக  ஒன்று கூட்டி  அவர்களுக்கு கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம்பற்றி கல்வியை வழங்கி, பேச்சாளர்கள் தங்கள் மார்க்கத்தை எடுத்துக் கூறும் போது மார்க்க சத்தியங்களுக்கு மக்களை மாற்றுவதாகும். இந்த நிகழ்வை அறிவுப்பூர்வமாகவும், அமைதியாகவும் நடத்த, விவாதத்திற்கு முன்னும், விவாதத்தின் போதும், விவாதம் முடியும் வரையும் மேலும் முடிந்து பிறகும் கைப்பற்ற வேண்டிய நடத்தை விதிகளாக பின்வரும் குறிப்புகளை SAN மற்றும் IRF முறையாக ஒப்புக்கொண்டுள்ளனர். பின்வரும் குறிப்புகள்: 

1. SAN மற்றும் IRF, அறிவிக்கப்படும் விவாத தலைப்பின் கீழ் கிறிஸ்தவத்தின் சார்பாக சகோ. ஜெரி தாமஸ் (SAN பேச்சாளர்) மற்றும் அதே நிகழ்ச்சிக்கு இஸ்லாம் சார்பாக ஜனாப். Dr.ஜாகீர் நாயக் ஆகியோருக்கு இடையில் கல்வி மற்றும் அறிவுச்சார்ந்த ஒரு திறந்த வெளி பொது விவாதத்தை நடத்த  ஒப்புக் கொண்டிருக்கின்றன.

2. பொது விவாத நாள் : A.D. XXX the Saturday (TBD).

3. SAN மற்றும் IRF ன் விவாத நடுவர் மேடை ஏறும் போது விவாதம் தொடங்கும். முக்கிய நடுவர் IRF நடுவருடன் இணைந்து செயலாற்றும் SAN நடுவராக இருப்பார். SAN நடுவர் பேச்சாளர்களையும் மற்று பிரதிநிதிகளையும் மேடைக்கு வரவழைப்பார். இருதரப்பிலிருந்தும் பிரதிநிதிகளும் முறையே தங்களுடைய பேச்சாளர்களுக்கு வசனங்களை பொதுஜனத்திற்கு படிப்பதற்கும், சுட்டு குறிப்புகளை பரிசோதிக்கவும், குறிப்புகளில் உதவி செய்யவும் இருப்பார்கள்.

4. அதன் பிறகு 10 நிமிடங்களுக்கு பரிசுத்த வேதாகத்தை வாசிக்கும் நேரமும் அதைத் தொடாந்து அதே கால அளவில் குரானை வாசிக்கும் நேரமும் இருக்கும்

5. SAN நடுவர் விவாதத்தின் தலைப்பு, விவாத அமைப்பு மற்றும் இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டபடி விவதாதத்தை அமைதிப் பூர்வமாக நடத்துவதற்கு பார்வையாளர்களால் கடைபிடிக்கப்பட வேண்டிய விதிகளையும் அறிவிப்பார்.

6. SAN நடுவர் SAN பேச்சாளரை அறிமுகம் (அல்லது அறிமுகம் செய்ய யாரையாவத அழைப்பார்) செய்வார் அதைத் தொடர்ந்து IRF நடுவர் IRF பேச்சாளரை அறிமுகம் (அல்லது அறிமுகம் செய்ய யாரையாவத அழைப்பார்) செய்வார்.

7. விவாத அமைப்பின் விதமானது:

விவாதத்திற்கு தங்கள் கருத்துக்களை பதிவு செய்யும் வரிசையானது:  கிறிஸ்தவ பேச்சாளர் (அல்லது முஸ்லீம பேச்சாளர்- TBD) தங்கள் கருத்தை பதிவுசெய்வார்கள் அதைத் தொடர்ந்து முஸ்லீம் பேச்சாளர் (அல்லது கிறிஸ்தவ பேச்சாளர் - TBD) தங்களுடைய கருத்தை பதிவு செய்வார். அதைத் தொடர்ந்து இந்த வரிசையில் மறுப்புக்  கொடுப்பது தொடரும்.

அ) ஒவ்வொரு தலைப்பும் முறையே இருதரப்பு பேச்சாளர்களால் 60 நிமிடங்களுக்கு பேசப்படும். (pl. note clause 9)


ஆ) இதைத் தொடர்ந்து இருதரப்பிலிருந்தும் முறையே 20 நிமிடங்கள் மறுப்புக் கொடுப்பதும் நடைபெறும். (pl. note clause 8)

இ) கருத்து பதிவு செய்வது மற்றும் மறுப்புக் கொடுப்பதைத் தொடர்ந்து வந்திருக்கும பொதுஜனங்கள் கேள்வி கேட்க 45 நிமிட கேள்வி பதில் நேரம் பொதுவானதாக இருக்கும்.

ஈ) பார்வையாளர்கள் கேள்வி கேட்க அதிகபட்சமாக 2 நிமிடமும் ஒவ்வொரு கேள்விகளுக்கும் பதில் கொடுக்க பேச்சாளர்களக்கு 5 நிமிடமும் அதிகபட்சமாக அளிக்கப்படும். (pl. note clause 8)

உ) முதல் கேள்விக்கு பதில் அளிக்க நடுவர் இரண்டாவது பேச்சாளருக்கு 5 நிமிடம் கொடுப்பார் அதைத் தொடர்ந்து இரண்டாவது கேள்விக்கு பதில் அளிக்க நடுவர் முதல் பேச்சாளருக்கு 5 நிமிடமும் அளிப்பார். இவ்விதமாக கருத்து பதிவு, மறுப்புக் கொடுப்பது மற்றும் கேள்விக்கு பதில் அளிப்பது முழுப்பகுதி வரை தொடரும். 

8) யாரவது அதிகம் நேரம் எடுத்துவிட்டால், அதே அளவுக்கான நேரம் மற்ற தரப்பில் உள்ளவருக்கம் கொடுக்கப்படும். இருப்பினும் பேச்சாளர்களுக்கும் அவர்களது நேரத்தை நினைவுப்படுத்துவதும் நேரம் அதிகமாக எடுக்கப்படும் போது எச்சரிப்பதம் 5 நிமிடத்தை தாண்டும் போது விரும்பினால் மைக்ரோபோனை நிறுத்துவதும் இருதரப்பு நடுவர்களுடைய கடமையாகும்.

9) முடிவுரைக்குப் பிறகு சரியான கால அளவிற்கு SAN நடுவர் மற்றும் IRF நடுவர் ஏதாவது முக்கிய அறிவிப்புகள் வாசிக்க வேண்டுமென்றால் வாசிக்கலாம். 

10) விவாதத்திற்கான பொருளாதாராம் மற்றும் ஏற்பாடுகள், விளம்பரம் மற்றும் ஒளிப் பதிவு செய்வதைத் தவிர மற்றவைகளை SAN பொறுப்பெடுத்துக் கொள்ளும்.

11) SAN மற்றும் IRF எல்லா நியாயமாhன தொடர்பு முறைகளில் நிகழ்வுகளை விளம்ரபம் செய்ய முழு அதிகாரம் பெற்றிருக்கின்றனர். அதிகாரப்பூர்வமாக (ஏதாவது) புகைப்படம் SAN மற்றும் IRF மூலம் கொடுக்கப்பட்டிருப்பின் இரு தரப்பிலும் உபயோகப்படுத்தப்படலாம்.

12) SAN ம் IRF ம் தங்கள் சொந்த பெயரில் விளம்பரம் செய்யலாம்.

13) ஒருவேளை IRF தொடர்பாக SAN செய்யும் விளம்பரத்தில் அல்லது SAN தொடர்பாக IRF ன் விளம்பரத்தில் ஏதாவது எழுத்துப் பிழையோ தவறோ இருந்தால் அந்த விளம்பர சாதனம் அல்லது விளம்பரம் உடனடியாக திரும்ப பெறப்பட்டு திருத்தம் செய்யப்பட வேண்டும். பிறகு வெளியிடப்பட வேண்டும்.

14) திறந்த வெளி பொது விவாதத்திற்கான தலைப்பு:

15) (TBD)  விவாத மொழி ஆங்கிலம்.

16) பொது விவாதத்திற்கான இடம் : (TBD ) (கொச்சின்,கேரளா ,பெரிய ஹைதரபாத், ஆந்திரப்பிரதேஷ்)

17) SAN மற்றும் IRF தங்களுக்கு ஏற்ற விதத்தில் தங்கள் ஒலி ஃ ஒளிப் பதிவு செய்வதை தேவையான இடைவெளிகளோடு பார்வையாளர்களையோ அல்லது மறுபிரிவினரையோ மறிக்காமல் அமைத்துக் கொள்ளலாம்.

18) ஒளிப்பதிவு எடிட் செய்யப்படும் போது அதில் உள்ள எந்த தகவலும் மாற்றப்படாமல் இரு பேச்சாளர்களுடைய முழுமையான கருத்துப் பதிவு, மறுப்புக் கொடுத்தல், கேள்வி பதில் ஆகியவற்றோடு வெளியிடப்படவேண்டும். பிரதி (வெளீயீடு)  எந்த அமைப்பிலும் ஆனால் மேற்கூறப்பட்ட நிபந்தனைகளோடு இருக்கவேண்டும்.

19) SAN மற்றும் IRF சம அளவில் தன்னார்வலர்களை வைத்துக் கொள்ள வேண்டும். IRF தங்கள் முழுதிறைமையின் படி இஸ்லாமிய பார்வையாளர்களை கட்டுப்படுத்த வேண்டும் அதைப் போல் SAN தங்கள் முழுத்திறமையின் படி கிறிஸ்தவ பார்வையாளர்களை கட்டுப்படுத்த வேண்டும். தன்னார்வலர்கள் தங்களுக்குரிய பிரிவின் பெயர் பொறித்த பேட்ஜை அணிந்திருக்க வேண்டும்.

20) விவாதத்தின் முழுப்பகுதியும் விவாத தலைப்பின் அடிப்படையில் கிறிஸ்தவ முஸ்லீம் கருத்துக்களை கற்றுக்கொடுப்பதற்காகவே இருக்கிறது என்பதில் SAN ம் IRFம் தெளிவாக இருக்க வேண்டும். சமயங்களை ஒப்பாய்வு செய்யும் இரு தரப்பு பேச்சாளர்களாலும் கருத்துப் பதிவு, மறுப்பு கொடுத்தல் கேள்வி பதில் பகுதிகளில் வைக்கப்படும் விவாதமானது தெய்வதூஷணமாகவோ பொது நிந்தனையாகவோ கருதப்பட்டு அவர்கள் மீது சட்ட ரீதியான கேஸ் போடுவது என்பது ஒவ்வாததாகும்.  

21) இருதரப்பினருடைய சம்மதத்தோடு வேறு ஏதாவது முக்கியமான குறிப்புகள் சேர்க்கப்படவோ, திருத்தப்படவோ அல்லது நீக்கப்படவோ செய்யலாம். அப்படிப்பட்ட மாற்றங்களின் மூலம் இருதரப்பிற்கும் உரிய நேர்மை, நீதி மற்றும் சமஉரிமைகள் மாற்றியமைக்கப்படாது.

2.   Copy of the Reply from IRF to Sakshi Apologetics Network


On Mon, Jul 26, 2010 at 8:47 PM, < maqbool@irf.net> wrote:

25th July 2010

Dear Brother George John,

Greetings of Peace (Salaam) on you.

உங்களுக்கு சமாதானத்தின் (சலாம்) வாழ்த்துகள்.  

22 ஜூலை 2010 தேதியன்று கொடுக்கப்பட்ட உங்கள் கடிதத்தைப் பெற்றோம்.

நூற்றுக்கணக்கான மக்கள் Dr. ஜாகீர் நாயக்கிடம் விவாதத்திற்கு கேட்டுக் கொண்டிருப்பதால் அவருக்கோ அல்லது அவருடைய மாணாக்கருக்கோ விவதங்களுக்கு நேரமில்லை.
Dr. ஜாகீர் நாயக் வேறு சில முக்கியமான காரியங்களில் ஈடுபட்டிருக்கின்றார்.

ஒருவேளை நேரம் இருப்பினும் அவர் அதிக பிரசத்தி பெற்ற மற்றும் பெரிய பின்னடியார்கள் கூட்டம் கொண்ட ஒருவரோடு விவாதிப்பார். இருப்பினும் அவருடைய மாணாக்கருடன் விவாதத்தை ஒழுங்கப்படுத்த முயற்சி செய்தேன், ஆனால் திரு. ஜெரி தாமஸ் பெயரைக் கேட்டவுடனே, அவருடைய செயல்திறன் மிகவும் மோசமாக இருப்பதாக கண்டபடியால் அவரோடு விவாதித்து நேரத்தை செலவழிப்பது உகந்ததாயிருக்காது என்று சொல்லிவிட்டார்கள்.

அவர்களுக்கு நேரமிருந்தாலும் திரு. ஜெரி தாமஸை விட உயர் திறன் உள்ளவர்களிடத்தில் தான் விவாதிப்பர்கள்.
உங்களுடைய கடிதத்திலிருந்து ஏற்கனவே திரு. ஜெரி தாமஸ் சில முஸ்லீம்களோடு நடத்தியிப்பதை அறிந்து கொண்டோம். அவர்கள் Dr. ஜாகீர் நாயக்கின் மாணவர்களாக இருந்தவர்கள்.
மேலும நாங்கள் விசாரித்ததில் திரு. ஜெரி தாமஸ் Dr. ஜாகீர் நாயக்கின் மாணவர்களோடு கூட விவாதம் செய்யும் உயரிய தகுதி உள்ளவர் அல்ல என்ற தகவலை அறிந்து கொண்டோம்.

இது ஒரு விளம்பரம் படுத்தும் முயற்சியே என்று இந்த அழைப்புக் கடிதமே காட்டுகிறது. திரு. ஜெரி தாமஸ் போன்று அநேகர் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ளவதற்கென்றே தாங்கள் Dr. ஜாகீர் நாயக்கை விவாதத்திற்கு சவால் விட்டோம் என்ற கடிதத்தை காட்டும் எண்ணமுடையவர்களாயிருக்கின்றனர்.

எல்லாம் வல்ல இறைவனே நம்மை சத்தியத்திற்கும், சமாதானத்திற்கும் மற்றும் இரட்சிப்பிறகும் உரிய வழியிலே நடத்துவானாக. ஆமீன்.

Yours sincerely,

MAQBOOL BARWELKAR

Public Relation Manager

3 Copy of the Response of SAN to IRF

On Tue, Jul 27, 2010 at 2:26 PM, SAN (INDIA) < sakshi.apologeticsnetwork@gmail.com> wrote:

In the name of Yahweh, the only true name of God upon which all the true prophets have called, who in incarnation is known as Jesus Christ, in whose name every knee shall bow and every tongue shall confess be glorified for ever and ever.

To,
Maqbool Barwelkar
Public Relation Manager,
IRF, Mumbai

Dear Brother Maqbool Barwelkar,


Dr.  ஜாகீர் நாயக்குடன் எங்கள் விவாதம் பற்றி கடிதத்திற்கு இமெயில் பதில் கொடுத்ததற்கு நன்றி .

அநேக இடங்களில் தடை செய்யப்பட்டு, மற்ற முஸ்லீம்களால் 20 க்கும் அதிகமான பத்துவா பெற்றுள்ள Dr. ஜாகீர் நாயக் குறிப்பாக நாங்கள் அடுத்த வருடம் 2011 வரை விவாதத்திற்கு தேதி கொடுத்து இருக்கும் போதும் நேரமில்லாத அளவுக்கு 'மற்ற முக்கியமான காரியங்களில் ஈடுப்பட்டிருக்கின்றார்" என்று கேட்கும் போது விநோதமாயிருக்கிறது. மார்க்கத்தை பிரசங்கிப்பதன் empireமூலம் ஒரு இராஜ்ஜியத்தை  (Source: The Tehelka, July 10, 2010 "a research foundation that provides fodder for all these").   (e.g. international school)   கட்டியிருக்கும் ஒரு மனிதனுடைய வேலைப் பழுவை நாங்கள் புரிந்து கொள்கிறோம். மற்ற தாவா பிரச்சாரர்களோடு வெற்றிகரமாக விவாதம் நடத்தியிருக்கும் கிறிஸ்தவர்களோடு விவாதம் செய்வதற்கு விருப்பமில்லையென்று தெரிவிக்கும் அவர் இனி மார்க்க ஒப்பாய்வுப் பாடங்களைப் பற்றி குறிப்பாக கிறிஸதவத்தைப் பற்றி பேசுவதை நிறுத்திக் கொண்டு தன்னுடைய நிர்வாக பொறுப்புகளை கவனிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்.

விவாத அழைப்பை தவிர்ப்பதற்கான உங்களுடைய காரணங்கள் எங்களை சிரிக்க வைக்கிறது. முன்பின் விவாதமே செய்யாத ஒருவருடன் விவாதிக்க வரும் படி உங்களிடத்தில் அழைப்பு கொடுக்கவில்லை மாறாக மற்றா தாவா பிரச்சாரர்களிடத்தில் வெற்றிகரமாக விவாதம் செய்து வெளிப்படையாக அவர்களுக்கு சரியான மறுப்புக் கொடுத்திருக்கும் ஒருவரைத் தான் முன்நிறுத்தியிருக்கிறோம் என்பதை கவனிக்க வேண்டும். அதே நேரத்தில் கடந்த நாட்களில் நடந்தவைகளையும் ஞாபகப்படுத்திப் பார்க்க வேண்டும் உலகப் பிரசித்திப் பெற்ற கிறிஸ்தவ மார்க்க அறிஞர்கள் ஆன்சரிங் இஸ்லாமின் சகோ. சாம் சாமோன் (Sam Shamoun) போன்றவர்களுடன் Dr.ஜாகீர் நாயக் அமெரிக்காவில் விவாதம் செய்ய எல்லாம் ஏதுவாயிருந்த போதும் உங்கள் அமைப்பு அந்த விவாதங்களை இதே போல் தவிர்த்து இருக்கிறது. ஆனால் அதன்பிறகு விவாதம் செய்யாத நூலாசிரியர்கள் மற்றும் பிரசங்கிமார்கள் போன்ற கிறிஸ்தவர்களோடு விவாதம் நடத்தியிருக்கிறீர்கள். எனவே விவாதம் செய்வதற்கு விருப்பமில்லாத உங்களிடமிருந்து ஒரு அறிவான தந்திரமான மனப்பாங்கு எழும்பியிருப்தை நாங்கள் காண்கிறோம், அது என்னவென்றால்  நீங்கள் யாரென்று வெளியாகி உங்கள் மதிப்பை இழந்து போகாத வண்ணம் ஒருபோதும் திறமையுள்ள கிறிஸ்தவ விவாதம் செய்பவரோடு விவாதம் செய்யக் கூடாது மாறாக விவாதத்தில் அனுபவம் இல்லாதவர்களையே எப்போதும் தெரிந்து கொள்ளுங்கள்.

இன்னொரு விதத்தில் சொல்ல வேண்டுமானால், இது ஜாகீர் நாயக் சச்சின் தெண்டுல்கரோடு செஸ் விளையாடிவிட்டு, ஜாகீர் நாயக் திரளான ரசிகர்களைக் கொண்டிருக்கும் இந்தியாவின் மிகச் சிறந்த ஒரு வீரரோடு சதுரங்கம் விளையாடிவிட்டார் என்று தம்பட்டம் அடித்துவிட்டு விஸ்வநாத் ஆனந்திடமிருந்து வரும் அழைப்பை Dr. ஜாகீர் நாயக் 'திரளான ரசிகர் பட்டாளம் உள்ளவர்களோடு" மட்டும் தான் விளையாடுவார் என்று தவிர்ப்பதைப் போல் இருக்கிறது.    

  'இருப்பினும் அவருடைய மாணாக்கருடன் விவாதத்தை ஒழுங்கப்படுத்த முயற்சி செய்தேன், ஆனால் திரு. ஜெரி தாமஸ் பெயரைக் கேட்டவுடனே, அவருடைய செயல்திறன் மிகவும் மோசமாக இருப்பதாக கண்டபடியால் அவரோடு விவாதித்து நேரத்தை செலவழிப்பது உகந்ததாயிருக்காது என்று சொல்லிவிட்டார்கள்" என்ற உங்களுடைய கூற்று உண்மையில் எங்களுடைய சாக்ஷி அப்பாலஜெட்டிக் நெட்வொர்க்கின் பிரதிநிதிகளோடு எந்த ஒரு IRF பேச்சாளர்களும் விவாதிக்கப் பயப்படுவதைக் காட்டுகிறது. IRF மாணவர்களுக்குள்ளும் ; அவர்களுடைய விவாத தன்னம்பிக்கையை அழிக்கப் போதுமானவர் என்று நன்றாக அறியப்பட்ட சகோ. ஜெரி தாமஸ் உங்களுக்கு பிரபலமானவராக இல்லை என்பது ஆச்சரியமளிக்கிறது !!!.

மேலும் ' இது ஒரு விளம்பரம் படுத்தும் முயற்சியே என்று இந்த அழைப்புக் கடிதமே காட்டுகிறது" என்ற உங்கள் கருத்துக்கு.  திரு. ஜெரி தாமஸ் போன்று அநேகர் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ளவதற்கென்றே தாங்கள் Dr. ஜாகீர் நாயக்கை விவாதத்திற்கு சவால் விட்டோம் என்ற கடிதத்தை காட்டும் எண்ணமுடையவர்களாயிருக்கின்றனர்" என்பது - போப் பெனடிக்டை விவாதம் செய்ய அழைத்தது போல விளம்பரமாவதற்கு உங்களுடைய தனிப்பட்ட முறையாக இருக்க வேண்டும் எங்களுடையதல்ல. எந்தக் கேள்விக்கும் இடமில்லாத வகையில் ஒரு பெரிய கிறிஸ்தவ சமுதாயத்திற்கே தலைவராயிருக்கும் போப் பெனடிக்ட்டோடு ஒப்பிடுவதற்கு பெட்ரோ- டாலர்களால் உற்சாகப்படுத்தப்பட்டு உருவாக்கபட்ட ஒரு குழுவிற்கு தலைவராக இருக்கும் ஜாகீர் நாயக் யார்? நிச்சயமாக இதைத் தான் விளம்பரம் தேடும் ஒரு முயற்சி என்று கூறவேண்டும். ஆனால் சகோ. ஜெரி தாமஸ் னுச. ஜாகீர் நாயக்கை விவாதத்திற்கு அழைப்பது விளம்பரம் தேடும் ஒரு முயற்சியாகாது. சகோ. ஜெரி தாமஸ் பெட்ரோ - டாலர் மற்றும் அதின் மூலம எரியூட்டப்படும் பின்னடியார்கள் விஷயத்தை தவிர மற்றெல்லாம் காரியத்திலும் னுச. ஜாகீர் நாயக்கை காட்டிலும் சிறப்பானவரே. உதாரணமாக, உலக பத்திரிக்கை, அமெரிக்காவின் ஐந்தாவது பெரிய வார இதழ் அநேக சமகாலத்து காரியங்களைப் பற்றி சகோ. ஜெரி தாமஸின் சீரிய சிந்தனைகளை சேகரிப்பதற்காக அவரிடம் தொடர்ச்சியாக பேட்டி கண்டிருக்கிறது. அதே சமயம் இந்தியாவின் அரசியல் வார இதழ்களில் ஒன்றான தெகல்கா (Tehelka) பத்திரிக்கையானது ஜாகீர் நாயக்கை ஒரு ~கெட்டப் பிரசங்கியார்| (notorious preacher) என்று அழைக்கிறது. கிறிஸ்தவ விசுவாசத்தில் இருக்கும் அநேகப் பிரிவுகளில் சகோ. ஜெரி தாமஸ் பேசியிருக்கிறார் ஆனால் தன் சொந்த இனத்திற்குள்ளேயே ஜாகீர் நாயக்கிற்கு 20 க்கும் அதிகமான பத்வா கொடுக்கப்பட்டிருக்கிறது.     சகோ. ஜெரி தாமஸ் தன்னுடைய பொது வகுப்புகளுக்கு அப்பாற் சிறப்பாக ஆய்வு செய்யப்பட்ட ஏராளமான கட்டுரைகளையும் பதிலையும் எழுதியிருக்கிறார் அவை அநேக பத்திரிகைகளில் வெளியாயிருக்கிறது. ஆனால் னுச. ஜாகீர்; நாயக் தன்னுடைய நிரூபிக்கப் படாத பேச்சுக்களையே பேப்பர் வடிவத்தில் திரும்ப எழுதியிருக்கிறார். மேலும், சகோ. ஜெரி தாமஸின் முந்தைய விவாதங்கள் ஏற்கனவே விவாதம் செய்து வந்த தாவா பிரச்சாரர்களுடன் நடந்தது ஆனால் னுச. ஜாகீர் நாயக்கோ ஒருபோதும் விவாதமே செய்திராத அல்லது திறம்பட விவாத்திராத கிறிஸ்தவர்களுடன் விவாதம் நடத்தினார். இன்னொரு வார்த்தையில்  - ஒரு அறிவுப்பூர்வமான விவாதத்திற்கு எது தேவை - ஆய்வு செய்யப்பட்ட கட்டுரைகள், ஏற்றுக்கொள்ளக் கூடிய அளவிற்கு தகுதி, சொந்த சமூகத்தால் ஒப்புக் கொள்ளப்பட்டிருப்பது, முன்னர் திறம்பட விவாதம் செய்திருப்பது. சகோ. ஜெரி தாமஸ் னுச. ஜாகீர் நாயக்கை காட்டிலும் மேம்பட்டவராகவே இருக்கிறார். ஆனால் அவர் ஒரு காரியத்தில் உண்மையாக ஜாகீர்; நாயக்கை விட ஒப்பிடமுடியாத அளவுக்கு பின்தங்கியிருக்கிறார் என்பதை நாங்கள் ஒத்துக் கொள்கிறோம், பெட்ரோ - டாலர் விஷயத்தில்.
விவாதிக்க விருப்பமிண்மைக்கான சரியான காரணங்களை நீங்கள் வெளிப்படுத்தியிருக்கும் போது, நாங்கள் கிறிஸ்தவ சமூகத்திற்கும் பெரும் எண்ணிக்கையிலான பொது ஜனங்களுக்கும் விவாதத்திற்கு உங்களுடைய தயக்கம் மற்றும் அனைத்து எதிரிடையான வாதங்களும்  வெறுமையும் நேர்மையற்றதுமாயிருக்கிறது என்பதை தெரியப்படுத்த வேண்டிய கட்டாயத்திலிருக்கிறோம்.
கிறிஸ்தவர்கள் னுச. ஜாகீர் நாயக் மற்றும் IRF உடன் விவாதிக்க தயாராக இல்லை என்ற உங்களுயை வீண் பேச்சுக்களுக்கு முற்றுப் புள்ளி வைப்பதற்காக இப்போதும் எதிர்காலத்திலும் இந்த விவாத அழைப்பை உங்களுக்கு திறந்தே வைக்கிறோம். மீண்டும், இரண்டு பிரிவுகளையும் சரியாக பரிசோதிக்கும் தலைப்பின் கீழ் நியாயமான மற்றும் நேர்முறையான முறையில் IRF பிரதிநிதிகளோடு விவாதிக்க SAN பிரதிநிதிகளும் Dr. ஜாகீர் நாயக்கோடு விவாதிக்க சகோ.ஜெரி தாமஸ_ம் தயாராக உள்ளனர் என்பதை அறிந்து கொள்ளவும்.
IRF ல் உள்ள எல்லா சகோதரர்களும் சத்தியத்தை அறிந்து கொண்டு எங்களுடைய ஆவிக்குரிய சகோதரர்களாகும் படி நாங்கள் உண்மையாக ஜெபிக்கிறோம்.




SAN குறிப்பு: இந்த தகவல்களை தயவு செய்து ஜாகீர் நாயக்கோடும் அவருடை குழுவோடும் ஈடுபடும் எல்லாக் கிறிஸ்தவர்களுக்கும் அனுப்பவும் அதன் பிறகு IRF அலுவலர்கள் கிறிஸ்தவர்களை ஏதாவது சவாலோடு நெருங்கினால், அவர்களைக் கிறிஸ்தவர்கள் SAN க்கு நேராக திருப்பி SAN உடன் விவாதிக்கும் படி சொல்லட்டும்.   


ஆங்கிலத்தில் அறிந்துகொள்ள:http://www.sakshitimes.org/index.php?option=com_content&task=view&id=537&Itemid=42